தற்போது ரஜினி நடிக்கும் அண்ணாத்த, சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் காமெடி ரோலில் நடித்து வருகிறார். அதே சமயம் டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் லீட் ரோலில் நடிக்கிறார். அதுவும் போலீஸ் வேடத்தில். இதே படத்தில் நக்சலைட்டாக மற்றொரு முக்கிய ரோலில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.


சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் தனது குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர் சூரி. அதில் அம்மா மற்றும் குழந்தைகள் மீது தனி பாசம் வைத்துள்ளார். கடந்த வாரம் சூரியின் அண்ணன் முத்துராமலிங்கத்தின் மகளுக்கு மதுரையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் காலம் என்பதால் மிக குறைந்த அளவிலான நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டனர்.



இந்நிலையில் இந்த திருமண விழாவில், திருமண சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் மணமகள் அறையில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் காணாமல் போய் உள்ளன. இவற்றின் மதிப்பு 2 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தகவல் தெரிந்து நகையை தேடிய போது, எங்கும் கிடைக்கவில்லை. திருமண விழாவில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டதே என சூரி குடும்பத்தினர் அதிர்ச்சி கலந்த கவலையில் உள்ளனர்.


திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் முதலில் சூரியின் குடும்பத்தினர் போலீசில் புகார் கொடுக்காமல் விட்டு விட்டனர். பிறகு குடும்பத்துடன் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, மதுரை - கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளனர். சூரி குடும்பத்தினரின் புகாரைத் தொடர்ந்து, தீவிர விசாரணை நடந்து வருகிறதாம்.