'விஜய் டிவி 'யில்  ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ் சீசன் 5' 
இந்நிகழ்ச்சியை நடிகர் 'கமல்' தொகுத்து வழங்குகின்றார்.மேலும்  இந்த முறை பெண்கள் நிறைய பங்கேற்க , திருநங்கை 'நமீதா மாரிமுத்து' பங்கேற்றுள்ளார்.
கடந்த சில  தினங்களுக்கு முன் இவர் தன்னுடைய திருநங்கை வாழ்க்கை 
 குறித்து பேசியது, அனைவரது பாராட்டையும் ,அனுதாபத்தையும் பெற்றது. மேலும் இதன் தாக்கம் குறைந்த நிலையில்,சக போட்டியாளரான தாமரைச் செல்விக்கும்,நமீதாவுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில் கோபமடைந்த நமீதா வீட்டில் உள்ள பொருட்களை  தூக்கி உடைத்து ரகளை செய்தார் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
மேலும் வீட்டில் உள்ள அனைவரும் நமீதாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர், அது பலனளிக்காததால் நமீதாவுக்கு "Red card" தரப்பட்டு ,அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாக தகவல்கள் வருகின்றன, மேலும் தவிர்க்க முடியாத நிலையில் நமீதா ,அவராகவே வெளியேறியதாக  மற்றொரு தரப்பில் கூறப்படுகிறது.