பிரான்ஸ் தலைநகர் பாரிசில் புகழ்பெற்ற ஈஃபில் கோபுரத்திலிருந்து மறுபுறம் உள்ள கட்டடம் வரை கயிற்றின் மேல் நடந்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இதன்படி ,நாதன் பவுலின் என்று அழைக்கப்படும் அந்த இளைஞர் ஈஃபில் கோபுரத்திலிருந்து சுமார் 600 மீட்டருக்கு அப்பால் உள்ள சாய்லாட் என்ற திரையரங்கு வரை 70 மீட்டர் உயரத்தில் கயிற்றின் மீது அசாத்தியமாக நடந்து சென்றார்.
மேலும் ,நாதன் பவுலின் இந்தச் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பாக அவரே கடந்த 2017ம் ஆண்டு இதேபோல் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.